Sunday, June 29, 2014

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 2014 – 2015-Distance

M.Ed. Advertisement (2014-2015)
http://www.bdu.ac.in/admission/cde2014/CDE_MED_ADVT_2014.pdf

Wednesday, June 11, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|



IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம்
ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்புகளை வழங்கி வருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம்.

எம்எட் படிப்பில் சேர பிஎட் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் தேவை. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. பிஎட் முடித்த பிறகு 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. அதோடு தற்போது ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 2014-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை இக்னோ மண்டல அலுவலகங்கள் (சென்னை, மதுரை, திருவனந்தபுரம்) மற்றும் அவற்றுக்கு உட்பட்ட கல்வி மையங்களில் ரூ.1,000 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் தலாம். இவ்வாறு பயன்படுத் தும்போது, “IGNOU” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் (ரூ.1,050-க்கு) எடுத்து, எந்த மண்டலத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டுமோ அங்கு செலுத்த தக்கதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் வட மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சென்னை மண்டலத்துக்கும் (தொலைபேசி எண் 044-24312766) திருச்சி மற்றும் அதற்கு தென்புறம் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மண்டலத்துக்கும் (0452-2370733) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்கோடி மாவட்டங்களின் ஆசிரியர்கள் திருவனந்தபுரம் மண்டலத்துக்கும் (0471-2344113) விண்ணப்பிக்க வேண்டும்.

மண்டல அலுவலங்களிலும், கல்வி மையங்களிலும் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது. எம்எட் படிப்பை பொருத்த வரையில் ஒவ்வொரு மண்டலத் திலும் 35 இடங்கள் உள்ளன. பிஎட் படிப்புக்கு மண்டலத்துக்கு ஏற்ப 4 ஆயிரம், 2,500 என குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Monday, June 9, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து, அது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத் தொடர்ந்து, தற்போது எம்.எட். படிப்பு குறித்த பிரமாணப் பத்திர தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடம் சார்பில் எம்.எட். படிப்பினை அஞ்சல் வழியில் (தொலைதூரக் கல்வி) நடத்துவதற்கு, பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி

கவுன்சிலின் மண்டல இயக்குநருக்கு 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பம் செய்யப்பட்டு, அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

தற்போது எம்.எட். சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப விநியோகமும் நடந்து வருகிறது.

இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், எஸ்.சுதர்சன் என்பவர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் கல்வியியல் துறையில் முழுநேரப் பேராசிரியராக 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரியில் புகார் ஒன்றில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்டவர். நிலைமை இவ்வாறிருக்க பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல்கலைக்கழக முழுநேரப் பேராசிரியராக எஸ்.சுதர்சன் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்றும், விளம்பரம் செய்யாமல் எப்போது தேர்வு செய்யப்பட்டார் என்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.

பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆசிரியர் நியமிக்கப்படும்போது, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட வேண்டும்.

எனவே முழுநேரப் பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நியமனம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்த விவரமும் தெரியாத நிலையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குறித்த பிரமாணப் பத்திரம் போலியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதனிடையே பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்ள்க்ங்ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ம்ங்க்.ல்க்ச்) எம்.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அரசு விசாரிக்க வேண்டும்: இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டி கூறுகையில், எம்.எட். படிப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இவ்விஷயத்தில் ஏதோ தவறு உள்ளது தெரியவருகிறது.

இவ்விஷயம் குறித்து ஆளுநரும், தமிழக அரசும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு நடந்திருந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



கிரிமினல் நடவடிக்கை தேவை



இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கூறுகையில், பல்கலைக்கழகங்களே தவறு செய்யும்போது இணைப்புக் கல்லூரிகள் எப்படி நியாயமாக செயல்படும் என்ற கேள்வி எழுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பு தொடங்க தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் உண்மையானதா, போலியானதா, முறைகேடுகள் எதுவும் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தெரியவில்லை. ஒரு பல்கலைக்கழகமே தவறு செய்வது மன்னிக்க முடியாத செயலாகும். இதில் ஏதாவது தவறு நடந்திருப்பது தெரியவந்தால் குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்:நுழைவுத்தேர்வு இல்லை; தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அனுபவம் உடைய பட்டதாரிகள் சேரலாம். தற்போது தொடர்ந்து பணியில் இருந்து வர வேண்டும். தமிழ்வழிக்கு 500 இடங்களும், ஆங்கிலவழிக்கு 500 இடங்களும் உள்ளன.

2014-2015-ம் கல்விஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் ஆகஸ்ட்14-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. பல்கலைக்கழக மண்டல அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்களில் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். இந்த விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.tnou.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் திக்கொள்ளலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது விண் ணப்பக் கட்டணமாக ரூ.500-க்கு ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை-15’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை இணைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.550-க்கு டிமாண்ட் டிராப்டை பல்கலைக் கழகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்துக்கு ஆகஸ்ட் 14-ம்தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத்தேர்வு இல்லை

சேர்க்கை பணி அக்டோபர் மாதம் தொடங்கும். நுழைவுத் தேர்வும் ஏதும் கிடையாது. வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24306657, 24306658 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.முருகன் தெரிவித்துள்ளார்.

Sunday, June 8, 2014

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.

விண்ணப்பங்கள் ஆகஸ்டு 14ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதே போன்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ந் தேதிக்குள் திருப்பப்பெறப்படும். இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரிசென்னை, எஸ்.டி.இந்து கல்லூரிநாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரிவேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவிழுப்புரம் ஆகியவற்றில் வினியோகம் செய்யப்படுகின்றன.

மண்டலம், கல்விமையங்கள்

மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரிகோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரிதர்மபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரிதிருச்சி மற்றும் கல்வி மையங்களான ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரிசென்னை, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரிசென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரிகோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரிதஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரிதிருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரிமசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரிராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரிமதுரை, பவானி கல்வியியல் கல்லூரிகடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ர்ன்.ஹஸ்ரீ.ண்ய் ன் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து 500 ரூபாய்க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, 550 ரூபாய்க்கான வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை15 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை600015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

2015 ஜனவரியில் தொடக்கம்

மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது

Tuesday, June 3, 2014

இந்த ஆண்டு புதிதாக 40 பி.எட் கல்லூரிகள்: துணைவேந்தர் தகவல்

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.

மேலும், பிளஸ் 2 முடித்தவர்களும், பி.ஏ., பி.எஸ்.சி., பட்டபடிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சியை முடித்தால்தான் தகுதித் தேர்வு எழுத முடியும். எனவே, கடந்த 5 வருடங்களாக பி.எட் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 657 பி.எட் கல்லூரிகள் உள்ளன. இதில் 21 கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும்.

மேலும் இந்த வருடத்துக்கு 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் பி.எட் படிப்பை முடிக்கிறார்கள். இந்த வருடம் மேலும் 40 புதிய பி.எட் கல்லூரிகள் வர இருப்பதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

40 புதிய கல்லூரிகள் தொடங்க டெல்லியில் உள்ள என்.சி.டி.இ அங்கீகாரம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இணைப்பு அனுமதி பெற்றால்தான் கல்லூரியை தொடங்க முடியும். அதற்கு 10 சான்றிதழ் அவசியம். சுற்றுச் சூழல் சான்று, கட்டிடத்தின் உறுதித் தன்மை, டி.டி.பி., அப்ரூவல் உள்ளிட்ட இந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். முறையாக விண்ணப்பத்தால் அனுமதி வழங்கப்படும்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவது குறித்து அரசிடம் இருந்து விரைவில் அறிவிக்கை வரும். அவை வந்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.

பி.எட் 2 வருட படிப்பு இந்த ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு (2015–16) தான் இந்த புதிய முறை தொடங்கும். இதற்காக என்.சி.டி.ஏ, பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
பி.எட். வினாத்தாள் அவுட் ஆகவில்லை: துணைவேந்தர் மறுப்பு

தமிழகம் முழுவதும் பி.எட்., மற்றும் எம்.எட். தேர்வுகள் தற்போது 102 மையங்களில் நடைபெற்று வருகின்றன. தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் வகுத்துள்ளது.

பறக்கும் படை அமைத்து ரகசியமாகவும் கண்காணிக்கிறார்கள். கடந்த மாதம் 30–ந் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தேர்வை துணைவேந்தர் விஸ்வநாதன் சாதாரண உடையில் ரகசியமாக சென்று சோதனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பி.எட். உளவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியானதாக தகவல் பரவியது. சேலம் அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் இந்த தகவலை பரப்பி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வினாத்தாள் தான் நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்த தகவலை அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் பரப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான வினாத்தாள் உண்மையிலே அவுட் ஆனதா? என்பது குறித்து கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. அதை அவர் மறுத்து கூறியதாவது:–

சேலத்தில் பி.எட். வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. வினாத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இருந்து நேரிடையாக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்படும். அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், தலைமை கண்காணிப்பாளர் முன்னிலையில் வினாத்தாள் ‘சீல்’ பிரிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இதில் தவறு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

தேர்வுக்கு முன்பாக முக்கியமான சில கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கூறுவது வழக்கம். அது போன்று கூறிய சில வினாக்கள் நேற்றைய உளவியல் தேர்வில் வந்துள்ளது. அதை யாரோ தவறாக வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக பரப்பி விட்டுள்ளனர். தேர்வில் எந்த முறைகேடுக்கும் இடமளிக்காத வகையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இந்த தவறான தகவல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டது. இதை மாணவர்கள், பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
LikeLike ·  · Promote · 

Sunday, June 1, 2014

பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட், எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித குழப்பமும் இல்லை.

கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ரெப்ரசண்டேடிவ், பறக்கும்படை என மூன்றடுக்கு கண்காணிப்பு உள்ளது. சுமார் 75 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு தேர்வு எழுதி அரியர் உள்ள மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வியியல் கல்வியின் தரத்தை உயர்த்த பிஎட் கல்வியை இரண்டு ஆண்டுகளாக மாற்ற தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (என்சிடிஇ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வெப்சைட்டில் மாணவர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்வி இரண்டாண்டுகளாக மாற்றப்படுமா என்பது தெரியவரும். தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பணம் வாங்க கூடாது என அரசு ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதும் வழங்கப்படும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பணத்தை கல்லூரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்