Friday, June 23, 2017

தொலைதூர பி.எட்., சேர்க்கை துவக்கம்

பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மையம் மூலம், 2017-19ம் ஆண்டிற்கான பி.எட்., மாணவர்கள் சேர்க்கை நடந்து வருவதாக, மைய இயக்குனர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆசிரியர் பயிற்சி ஆணையத்தின் விதிமுறைகளின் படி, பிளஸ்2 முடித்து, இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று இருப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இதற்கு, இரண்டு ஆண்டு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய, பணி அனுபவ சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

உரிய தகுதியுடன், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொலைதுார முறையில் பி.எட்., படிப்பை மேற்கொள்ள, மைய இயக்குனரை நேரடியாக அணுகி சேர்ந்துகொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 0422-2427742, 94431-88869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment