Wednesday, August 24, 2016

பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால்,ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாகபி.ஏ.பி.எட்.மற்றும் பி.எஸ்சி.பி.எட்.பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல்கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்
.
சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பொறியியல் மாணவர்கள்இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகசென்னை,தர்மபுரிகோவைதிருச்சிதிருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்
ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறவெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளைமாணவர்கள் கேட்டு பயன் பெறவீடியோ கான்பரன்ஸ் ஒலி ஒளியக மையம்சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்
மதுரையில் உள்ளதமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில்பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்இங்குஆண்டுக்கு, 100 பேருக்குசெய்முறை பயிற்சி அளிக்கப்படும்
கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம்காஞ்சிபுரம் மாவட்டம்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில்தலா, 8 கோடி ரூபாய் செலவில்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்
அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள்மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு,மாணவர்கள்ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில்அண்ணா பல்கலையில் நிறுவப்படும்இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில்மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம்மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்டஒரு பெருங்கூட்டரங்கமும்,50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
அண்ணா பல்கலையில்சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள்விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால்நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்.மற்றும் பி.எஸ்சி.பி.எட்.பாடப்பிரிவுகள்இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்
மதுரை காமராஜர் பல்கலையில்நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடியஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில்உள் விளையாட்டரங்கம்நுாலகம் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

No comments:

Post a Comment